புதுச்சேரி: இளைஞர் அமைதி மையத்தின் கவிதை போட்டி யில் வெற்றி பெற்றவர்கள் விபரம் வெளியிடப்பட்டது. நிறுவனர் அரிமதி இளம்பரிதி விடுத்துள்ள அறிக்கை:இளைஞர் அமைதி மையம் சார்பில், இலக்கிய ஆளுமை அரிமதி தென்னகன் என்ற தலைப்பில் மாநில அளவிலான கவிதை போட்டி நடந்தது. போட்டியில் பங்கேற்றவர்களில் சுந்தர சந்திரகுமரன், சிவசுப்ரமணியன், தேவி, ஜமுனா ரவி, தையல்நாயகி, துரைராசன், ராமஜெயம், பூம்புகார் பொன் ராஜ் தேர்வாகினர். இவர்களுக்கு வரும் 9 ம் தேதி விருது வழங்கப்பட உள்ளது. முன்னாள் கல்வி அமைச்சர் சிவக்குமார் பங்கேற்கிறார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE