ராமேஸ்வரம் : இலங்கை எல்லைக்குள் மீன்பிடிக்க சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்தனர்.
டிச.,14ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 29 பேரை கைது செய்து ஜன.,4 வரை தனிமையில் வைக்க இலங்கை உத்தரவிட்டது.மீனவர்களை விடுவிக்க கோரி டிச.,16 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்ஆனால் சிறியரக விசைப் படகு மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடாமல் மீன்பிடிக்கசென்றனர்.டிச.,30ல் இந்திய, இலங்கை மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இருநாடு அதிகாரிகள் இடையே நடந்த பேச்சு வார்த்தையில், கைதான மீனவர்கள் விடுவிக்க வாய்ப்பு ஏற்பட்டதால், ராமேஸ்வரம் மீனவர்கள் ஸ்டிரைக்கை வாபஸ் பெற்றனர்.
நேற்று ராமேஸ்வரத்தில் மீனவர் சங்க கூட்டம் சகாயம் தலைமையில் நடந்தது. இதில், இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லை தாண்டி இலங்கை பகுதிக்குள் மீன்பிடிக்க கூடாது, மீறும் மீனவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அப்படகு இத்துறை முகத்தில் இருந்து வெளியேற்றப்படும்' என தீர்மானத்தில் தெரிவித்தனர்.இதன்பின் 17 நாள்களுக்கு பின் நேற்று கனரக விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE