திட்டக்குடி: நாவலுார் கிராமத்தில் ஏரியில் மீன் வளர்ப்பு குத்தகைக்கான ஏலம் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மங்களூர் அடுத்த நாவலுார் கிராமத்தில் உள்ள ஏரியில் மீன் வளர்ப்பு ஏலம் நேற்று காலை 11:00 மணிக்கு நடைபெறுவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திடீரென ஏலம் ரத்து செய்யப்பட்டது.இதனால், ஏலத்தில் பங்கேற்க வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். ரத்து செய்யப்பட்ட ஏலத்தை பி.டி.ஓ., முன்னிலையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நேற்று மதியம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிளைச் செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் பாண்டியன், நிர்வாகிகள் வேல்முருகன், கலியமூர்த்தி பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE