கடலுார்; புத்தாண்டையொட்டி கடலுார் மாவட்டத்தில் மது விற்பனை வழக்கத்தை விட 1.5 கோடி ரூபாய் கூடுதலாக விற்பனையானது.தமிழகத்தில், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில் விற்பனை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும்.கொரோனா காலத்தில் விற்பனை முழுதும் முடக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மது பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடலுார் மாவட்டத்தில் மொத்தம் 144 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி பல வகை மதுபாட்டில்களையும் முன்கூட்டியே அனைத்து கடைகளுக்கும் அனுப்பி இருப்பு வைக்கப்பட்டது.ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1ம் தேதி 4.5 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. வழக்கமாக நாளொன்றுக்கு 3 கோடி ரூபாய்க்கு விற்பனையாகும்.புத்தாண்டையொட்டி கூடுதலாக 1.5 கோடி ரூபாய்க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE