வடலுார்: கட்டுமான சங்கத்தின் ஆண்டு பேரவைக் கூட்டம் வடலுாரில் நடந்தது.நகர செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். அனைத்திந்திய மாதர் சங்க மாவட்டத் தலைவர் சிவகாமி, வடலுார் நகர தலைவர் ராதிகா வாழ்த்திப் பேசினர்.கூட்டத்தில், வடலுார் பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளை சுத்தம் செய்து சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்.வடிகால்களை சுத்தம் செய்து கொசு மருந்து அடிக்க வேண்டும். வடலுார் சபை மற்றும் தருமசாலை பகுதிகளைச் சுற்றி தங்கியுள்ள ஆதரவற்றோருக்கு வடலுார் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.தைப்பூசத்திற்கு வரும் பக்தர்களுக்கு வள்ளலார் தெய்வ நிலையம் சார்பில் சுத்தமான குடிநீர், மருத்துவம், கழிவறை வசதி ஏற்பாடுகள் செய்து கொடுக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE