குறிஞ்சிப்பாடி: டில்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக, குறிஞ்சிப்பாடியில் விவசாய சங்கத்தினர் உறுதிமொழியேற்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பஸ் நிலையம் அருகே, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நடந்த போராட்டத்திற்கு, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.போராட்டத்தில், மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை விலக்கிக்கொள்ளும் வரை நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு ஆதரவளிப்போம். மின்சார திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும். உழவர் எதிர்ப்பு சட்டங்களை ரத்து செய்யவேண்டும்.அம்பானி, அதானி குழும பொருட்களை புறக்கணிப்போம் என உறுதியெடுத்துக் கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE