இந்துார்:மத்திய பிரதேசத்தில், ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்திய, நகைச்சுவை பேச்சாளர் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள இந்துாரைச் சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., மாலினி லட்சுமண் சிங் கவுரின் மகன் ஏகலைவ் சிங் கவுர், போலீசில் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:இந்துாரில் சமீபத்தில் நகைச்சுவை நிகழ்ச்சி நடந்தது. இதில், குஜராத்தை சேர்ந்த நகைச்சுவை பேச்சாளர் முனாவர் பரூக்கியும், இந்துாரை சேர்ந்த அவரது நண்பர்கள் நான்கு பேரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில், நகைச்சுவை என்ற பெயரில், ஹிந்து கடவுள்களை மிகவும் இழிவுப்படுத்தி, அவர்கள் பேசினர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், தரக்குறைவாக விமர்சித்தனர். இதற்கு நானும், என் நண்பர்களும், நிகழ்ச்சி நடக்கும் போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, நகைச்சுவை பேச்சாளர் பரூக்கி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE