உளுந்தூர்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த காந்தி நகரை சேர்ந்தவர் பானுகுமார்,30. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன் தரப்பினருக்கும் முன்விரோதம் உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரும் திட்டி தாக்கிக் கொண்டனர்.இது குறித்து திருநாவலுார் போலீசார் தனித்தனியே வழக்கு பதிந்து, பரசுராமன்,23; சிவராஜ்,20; தமிழ்செல்வன்,23; சந்தோஷ்,24; சிவபெருமாள்,26; சதீஷ்,20; ஹரிதாஸ்,22; வல்லராசு,20; ஆகிய 8 பேரை கைது செய்தனர். மேலும், நான்கு பேரை தேடிவருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE