கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தமிழ்வழிக் கல்வி இயக்கம் சார்பில் 'தமிழ் புத்தாண்டும் - தமிழர் திருநாளும்' நுால் வெளியீடு மற்றும் திறனாய்வு கூட்டம் நடந்ததுகள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மீட்டிங் ஹாலில் நடந்த கூட்டத்திற்கு, சின்னப்பன் தலைமை தாங்கினார். நல்லரசன், தனக்கண்ணு, சோழன், பிரகாஷ், மதுரா முன்னிலை வகித்தனர். ராதா வரவேற்றார். புலவர் சங்கைத்தமிழர், அம்பேத்கர் ஆகியோர் 'தமிழ் புத்தாண்டும் - தமிழர் திருநாளும்' நுால் மற்றும் தமிழ் நாள்காட்டிவெளியிட்டு பேசினர்.இதில், சிலம்பூர்க்கிழான், மதிவாணன், சாந்தகுமார், முருகன், மலரடியான் உட்பட பலர் பங்கேற்றனர்.நுாலாசிரியர் மதியழகன் ஏற்புரை வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE