சிவகங்கை : கிராமக்கோயில் பூஜாரிகள் நல வாரியத்தை முழுமையாகசெயல்படுத்த வேண்டும், என கிராமக்கோயில் பூஜாரிகள்பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்ட கிராமக்கோயில் பூஜாரிகள் பேரவைக்கூட்டம் நடந்தது. வி.எச்.பி., மாவட்டத்தலைவர் சேது தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் சோமசுந்தரம் பங்கேற்றார். பூஜாரிகள் ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியதையும், ஓய்வூதியம் பெற ஆண்டு வருமானம் 24 ஆயிரம் என்பதை 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்திய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கையான பூஜாரிகள் நல வாரியத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம், பேரவை ஒன்றிய செயலாளர்கள் பூஜாரிகள் ஆறுமுகம், ஐய்யப்பன், ராமமூர்த்தி, திருமுத்து உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE