விழுப்புரம்: தமிழ்நாடு அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை இணைந்து 4வது ஆண்டு சித்த மருத்துவ தின விழா நடைபெற்றது.விழுப்புரம், தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் நடந்த விழாவிற்கு, மாவட்ட அரசு மருத்துவ கல்லுாரி முதல்வர் குந்தவிதேவி தலைமை தாங்கினார். சித்த மருத்துவ அலுவலர் மாலா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர்கள் செந்தில்குமார் (விழுப்புரம்), சதீஷ்குமார் (கள்ளக்குறிச்சி) ஆகியோர் சித்த மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்தும், கொரோனா நோய் தொற்று காலத்தில் அதன் அவசியம் குறித்து விளக்கினர்.இதில், சித்த மருத்துவத்தை வளர்த்த முனிவர்கள் போல் சிறுவர்கள் வேடமிட்டு, விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.மேலும், சித்த மருத்துவ முறைகள் சார்ந்த பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE