மொகாலி:பஞ்சாபில், 'முதல்வர் அமரீந்தர் சிங்கை கொலை செய்பவருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்ற சுவரொட்டி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபின் மொகாலி நகரின் வழிகாட்டி பலகையில், ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டு இருந்தது. அதில், 'முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்கை கொலை செய்யும் நபருக்கு, 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என, அச்சிடப்பட்டு இருந்தது. இந்த சுவரொட்டி, ஒரு கணினி மையத்தில் அச்சிடப்பட்டிருந்தது என்பதுடன், அதில் ஒரு, 'இ - மெயில்' முகவரியும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சுவரொட்டியை கைப்பற்றிய போலீசார், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்ததுடன், விசாரணையை, 'சைபர் கிரைம்' பிரிவிற்கு மாற்றியுள்ளனர். முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கு, ஏற்கனவே காலிஸ்தான் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE