விழுப்புரம்: விக்கிரவாண்டி பகுதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை கிராமத்தில், நேற்று முன்தினம் சுமார் 20 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.இதுகுறித்து அப்பகுதி வி.ஏ.ஓ., ராஜேஷ்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில், விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.பின்னர், வாலிபர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, இறந்த நபர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE