புதுடில்லி: கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால், குடியரசு தினமான, ஜன., 26ல், டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாக, விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
போராட்டம்மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, டில்லி எல்லையில், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த, 39 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்துக்கு தீர்வு காண, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், மத்திய அரசு, ஆறு சுற்று பேச்சு நடத்தியும் சுமுக தீர்வு ஏற்படவில்லை.
ஏழாம் சுற்று பேச்சு நாளை நடக்க உள்ள நிலையில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூறியதாவது:எங்களின் கோரிக்கைகளை, மத்திய அரசு ஏற்காவிட்டால், 6ம் தேதி முதல், போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். எங்களின், 50 சதவீத கோரிக்கைகள்
ஏற்கப்பட்டுவிட்டதாக, அரசு சொல்கிறது. ஆனால், 5 சதவீத கோரிக்கைகள் கூட ஏற்கப்படவில்லை. குடியரசு தினம்மாநிலங்களில் கவர்னர் மாளிகைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். ஜன., 26 குடியரசு தினத்தன்று, டில்லியில் டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்காக, டில்லியை நோக்கி விவசாயிகள் டிராக்டர்களில் வந்து, பேரணியில் பங்கேற்பர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE