கோவை:கோவை சிங்காநல்லுார் கள்ளிமடையை சேர்ந்தவர் மணிகண்டன், 22. நேற்று முன்தினம் இரவு, மது அருந்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த கருப்புசாமி, 43, ரஞ்சித்குமார், 31, செல்வராஜ், 44, பழனிசாமி, 52 ஆகியோர் மீது கற்களை வீசினார்.இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவர்கள் நால்வரையும், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காமாட்சிபுரம் சோதனை சாவடி அருகே நடந்து சென்று கொண்டிருந்த மணிகண்டனை, போலீசார் பிடித்தனர். வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE