கோவை:மொபைல்போன் பறிப்பில் ஈடுபட்ட வாலிபரை, போலீசார் சிறையில் அடைத்தனர்.கோவை புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து, 21; தனியார் நிறுவன ஊழியர். சவுரிபாளையம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். மீனா எஸ்டேட் அருகே உள்ள பாலம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அப்போது எதிரே வந்த வாலிபர், மாரிமுத்துவின் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.மாரிமுத்து சத்தமிட்டதால், அருகிலிருந்தவர்கள் வாலிபரை பிடித்தனர். அவரை பீளமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், வாலிபர் மதுரை மேலுார் சந்தைபேட்டையை சேர்ந்த நந்தகுமார், 20, தற்போது வெள்ளலுாரில் தங்கியிருப்பது தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE