கோவை:கோவை நீதிமன்றங்களில் கடந்தாண்டு, 20 வழக்குகளில் ஆயுள்சிறை விதிக்கப்பட்டுள்ளது.கோவை புறநகர் மாவட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகி, நீதிமன்ற விசாரணையில் இருந்த எட்டு கொலை வழக்குகளில், ஆறு வழக்குகளில் கடந்தாண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், 63 பேர் கைது செய்யப்பட்டு, போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.இக்கோர்ட்டில், 2020ல், போக்சோ சட்டத்தின் கீழ், ஐந்து வழக்குகளில் ஆயுள் சிறையும், ஒரு வழக்கில் ஏழாண்டு சிறையும்,ஒரு வழக்கில் ஐந்தாண்டு சிறையும், ஒரு வழக்கில் மூன்றாண்டு சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகர போலீஸ் ஸ்டேஷன் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட கொலை வழக்குகளில், ஐந்தில் ஆயுள்சிறை விதிக்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுக்கும் மேலாக நிலுவையிலிருந்த, அப்பாவி பெண் அம்மாசை கொலை வழக்கில், வக்கீல் தம்பதி உள்ளிட்ட மூவருக்கு, ஆயுள்சிறை விதிக்கப்பட்டுள்ளது.கடந்தாண்டில், போக்சோ சட்டத்தின் கீழ், 46 பேர் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இரண்டு போக்சோ வழக்குகளில் ஆயுள்சிறை விதிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE