சென்னை:'புயல்களால் பாதிக்கப்பட்ட, ஐந்து லட்சம் விவசாயிகளுக்கு, இடுபொருள் நிவாரணமாக, 600 கோடி ரூபாய் வழங்கப்படும். இத்தொகை, விவசாயிகளின் வங்கி கணக்குகளில், வரும், 7ம் தேதி முதல், நேரடியாக வரவு வைக்கப்படும்' என, முதல்வர் பழனிசாமி., அறிவித்துள்ளார்.
நிவாரணத்திற்கான உச்சவரம்பும் நீக்கப்பட்டுள்ளது.'நிவர், புரெவி' புயலால் ஏற்பட்ட, பயிர் சேதங்களை உடனடியாக கணக்கிடும்படி, வருவாய் துறை, வேளாண் துறை, தோட்டக்கலை துறை அலுவலர்களுக்கு, முதல்வர் உத்தரவிட்டார்.கடந்த மாதம், 8, 9ம் தேதிகளில், 'நிவர்' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், 28 முதல், 30௦ம் தேதி வரை, 'புரெவி' புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், மத்திய குழுவும் நேரில் ஆய்வு செய்தது.
நிவர் புயலால் ஏற்பட்ட சேதங்களை, தற்காலிகமாக சீரமைக்க, 641.83 கோடி ரூபாய்; நிரந்தரமாக சீரமைக்க, 3,108.55 கோடி ரூபாய் என, மொத்தம், 3,750.38 கோடி ரூபாய் தேவைப்படும்.புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை, தற்காலிகமாக சீரமைக்க, 485 கோடி ரூபாய்; நிரந்தரமாக சீரமைக்க, 1,029 கோடி ரூபாய் என, மொத்தம், 1,514 கோடி ரூபாய் தேவைப்படும் என, மத்திய அரசிடம் நிதியுதவி கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களை காக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதி வழி காட்டு நெறிமுறைகளின்படி,விவசாயிகளுக்கு வழங்கபடும் இடுபொருள் நிவாரண தொகையை, உயர்த்தி வழங்க, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அவரது அறிவிப்பு:
* மானாவாரி மற்றும் நீர்பாசன வசதி பெற்ற நெற்பயிர்களுக்கும், நீர்பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும், 1 ஹெக்டேருக்கு, அதாவது, ௨.௪௭ ஏக்கருக்கு வழங்கப்படும், இடுபொருள் நிவாரண தொகை, 13 ஆயிரத்து, 500 ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
* மானாவாரி நெற்பயிர் தவிர, அனைத்து மானாவாரி பயிர்களுக்கு, 1 ஹெக்டேருக்கு வழங்கப்படும், இடுபொருள் நிவாரண தொகை, 7,410 ரூபாயில் இருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
* பல்லாண்டு கால பயிர்களுக்கு, இடுபொருள் நிவாரண தொகையாக, ஹெக்டேருக்கு வழங்கப்படும், 18 ஆயிரம் ரூபாய், 25 ஆயிரம் ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும். உயர்த்தப்பட்ட இடுபொருள் நிவாரணத்திற்கான தொகையை, தமிழக அரசு வழங்கும் உச்சவரம்பில்லை
* தேசிய பேரிடர் நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பாதிப்படைந்த விவசாயிகளுக்கு, அதிக பட்சமாக, ௨ ஹெக்டேருக்கு மட்டுமே, இடுபொருள் வழங்க வழிவகை உள்ளது. இந்த பேரிடரில், அனைத்து விவசாயிகளும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள காரணத்தால்,
2 ஹெக்டேர் என்ற உச்சவரம்பை தளர்த்தி, பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுவதுக்கும், உச்சவரம்பின்றி இடுபொருள் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது
* நிவர், புரெவி புயல் காரணமாக பாதிப்புக்குள்ளான, 3.10 லட்சம் ஹெக்டேர் பரப்பளவிலான வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு, ஐந்து லட்சம் விவசாயிகளுக்கு, 600 கோடி ரூபாய், இடுபொருள் நிவாரணமாக வழங்கப்படும். இந்த நிவாரணம், விவசாயிகளின் வங்கி கணக்குகளில், 7ம் தேதி முதல், நேரடியாக வரவு வைக்கப்படும்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE