தோட்டக்கலை பயிர் சாகுபடியில் சாதித்த விவசாயிகளுக்கு, சிறப்பு விருது வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது.
மத்திய - மாநில அரசு திட்டங்களின் வாயிலாக, நவீன தொழில்நுட்பத்தை பின்பற்றி, தோட்டக்கலை பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், விருது வழங்கும் திட்டத்தை, தமிழக அரசு துவக்கியுள்ளது.தோட்டக்கலை இயக்குனர் சுப்பையன் கூறியதாவது:
தோட்டக்கலை பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 10 விருதுகள் வழங்கப்பட உள்ளன. சொந்த நிலம் வைத்து, சாதனை படைத்த தோட்டக்கலை விவசாயி, ஒரு விருதுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம். வட்டார அளவில் விருது பெறும் விவசாயிகள், மாவட்ட விருதுக்கும், மாவட்ட அளவில் விருது பெறுவோர், மாநில விருதுக்கும் பரிந்துரைக்கப்படுவர்.விருது பெற விருப்பமுள்ள, தகுதியான விவசாயிகள், www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE