திருப்பூர்:சட்டசபை தேர்தல் நெருங்குவதால், விற்பனைக்குழு நிர்வாகிகள் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், மாவட்டம் தோறும், வேளாண் விற்பனைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் வணிகர்கள், அதிகாரிகள் உறுப்பினராக நியமிக்கப்படுகின்றனர். அவர்களில் இருந்து, தலைவர், துணை தலைவர்கள் தேர்வாகின்றனர்.ஆளும்கட்சியினருக்கு, மூன்று ஆண்டுகளுக்கு, இப்பதவிகள் நியமன பதவிகளாக வழங்கப்படுகின்றன.
கடந்த, 2011 முதல், மார்க்கெட்டிங் கமிட்டிக்கு தேர்தல் நடத்தப்படவில்லை.விரைவில், சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில், கட்சியினருக்கு, புதிய பதவி கொடுக்கும் வகையில், மார்க்கெட்டிங் கமிட்டிக்கு நிர்வாகிகளை நியமிக்க, முடிவு செய்துள்ளது.அ.தி.மு.க., வினர் கூறுகையில், 'தமிழகத்தில், 26 மார்க்கெட்டிங் கமிட்டி உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக, நிர்வாகிகள் நியமிக்கப்படவில்லை; தற்போது தலைவர், துணை தலைவர் நியமனம் நடந்து வருகிறது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE