திண்டுக்கல், : திண்டுக்கல் சித்த மருத்துவத்துறை மற்றும்ஜி.டி.என். கல்லுாரி சார்பில் தேசிய சித்த மருத்துவ தின மூலிகை கண்காட்சி நடந்தது.
மாவட்ட சித்த மருத்து அலுவலர் ரபீக் தலைமை வகித்தார். தாடிக்கொம்பு வட்டார மருத்துவ அலுவலர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினார். ஜி.டி.என்., பாரா மெடிக்கல் கல்லுாரி முதல்வர் வசந்தா மணி, தனி அலுவலர் வெங்கடேசன், நிர்வாக அலுவலர் சிவா ஆனந்த், உதவி பேராசிரியர் பாண்டீஸ்வரர் பேசினர்.வட்டார மருத்துவ அலுவலர் பேச்சியம்மாள், டாக்டர் விஜயா, சித்த மருத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்தும் விளக்கினர். சுகாதார மேற்பார்வையாளர் முருகேசன், சித்த மருத்துவம் தோன்றிய முறை குறித்து விளக்கினார். டாக்டர் ஹசீனா தொகுத்து வழங்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE