திருநெல்வேலி:-அ.தி.மு.க., கூட்டணியில் எங்கள் பலத்திற்கேற்ப தொகுதிகளை கேட்டுப் பெறுவோம், என த.மா.கா., தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.
சட்டசபை தேர்தல் குறித்து திருநெல்வேலி மண்டல அளவில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் வாசன் பங்கேற்றார். அவர் கூறுகையில், 'அ.தி.மு.க., கூட்டணி வெற்றிக் கூட்டணியாக உள்ளது. 10 ஆண்டுகளாக மக்களின் எண்ணங்களை அ.தி.மு.க., அரசு நிறைவேற்றி வருகிறது. முதல்வர் வேட்பாளராக இ.பி.எஸ்.,ஐ ஆதரிக்கிறோம். எங்கள் பலத்திற்கேற்ப தொகுதிகளை கேட்டுப்பெறுவோம். சட்டசபையில் எங்கள் குரல் ஒலிக்கும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE