அனுப்பர்பாளையம்:திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டல பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ், ரோடு பணிக்கு, 1.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், 10வது வார்டில், 25 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் ரோடு புதுப்பித்தல், 11வது வார்டில், 25 லட்சம் ரூபாய், 14வது வார்டில், 25.60 லட்சம் ரூபாய், 15வது வார்டில், 25.20 லட்சம் ரூபாய் மதிப்பில் தார் ரோடு புதுப்பித்தல், உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.பணிக்கான பூமி பூஜை, நேற்று நடந்தது. வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. விஜயகுமார், பணியை தொடங்கி வைத்தார். உதவி கமிஷனர் வாசுகுமார், உதவி பொறியாளர் பிரபாகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE