திருப்பூர்;திருப்பூர் பத்திரப்பதிவு அலுவலகங்களில், கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக, மா.கம்யூ., கட்சி குற்றம்சாட்டியுள்ளது.திருப்பூர் அருகே நெருப்பெரிச்சலில், வடக்கு மற்றும் தெற்கு தாலுகா பகுதியில், இணை பதிவாளர் 1 மற்றும் 2, தொட்டிபாளையம் ஆகியவற்றை இணைத்து, ஒருங்கிணைந்த பதிவு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.இந்த அலுவலகத்தில், ரசீது முறைகேடு செய்த வகையில், 2 இணை பதிவாளர், 3 சார்-பதிவாளர், 2 உதவியாளர் உட்பட ஏழு பேர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக, கமிஷனரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இச்சூழலில், மா.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் முத்துகண்ணன், முதல்வருக்கு அனுப்புள்ள மனு:திருப்பூர், நெருப்பெரிச்சலில், ஒருங்கிணைந்த பதிவு அலுவலகம் கட்ட, மாநகராட்சியில், எவ்வித கட்டட அனுமதியும் பெறவே இல்லை. இந்த அலுவலகத்தில், பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. பல்லடம் சார் பதிவாளரும், விதிமுறையை மீறி செயல்பட்டுள்ளார்.முறைகேட்டில் தொடர்புடைய, உதவியாளர் இருவரும், இணை பதிவாளர் ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை காப்பாற்றும் வகையிலேயே நடவடிக்கை அமைந்துள்ளது. தமிழகம் முழுவதும் முறைகேடு நடந்துள்ள நிலையில், விசாரணை என்ற பெயரில், குற்றவாளிகளை தப்பவிடும் சூழல் உள்ளது.எனவே, முழு விசாரணை நடத்தி, குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கையாடல் செய்தவர்களிடம் இருந்து, மொத்த தொகையை பறிமுதல் செய்து, அரசு கணக்கில் செலுத்த வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE