திருப்பூர்:பகுஜன் சமாஜ் கட்சியின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ராயபுரம் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்துக்கு, மாவட்ட தலைவர் விக்டர் மனோவா தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் செல்வராஜ், லோக்சபா தொகுதி அமைப்பாளர் அய்யனார், மகளிர் அணி மணிமேகலை முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், மாவட்ட துணை தலைவராக அண்ணாதுரை, வடக்கு தொகுதி மகளிர் அணி தலைவராக ராதாமணி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.விரைவில், தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதியிலும் கட்சி சார்பில் போட்டியிடுவது என்றும், வேட்பாளர்களை வெற்றிபெற செய்ய பாடுபடுவது என, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE