அவிநாசி:அவிநாசி பகுதியில் நாளை அறிவிக்கப்பட்ட மின் தடை அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் விஜய ஈஸ்வரன் அறிக்கை:வேலம்பாளையம் பெருமாநல்லுார், நேதாஜி அப்பேரல் பார்க் மற்றும் பழங்கரை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில், நாளை, (4ம் தேதி) மின் பராமரிப்பு பணிகளுக்காக மின் வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.நிர்வாக காரணங்களால் இந்த பராமரிப்பு பணி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, நாளை அப்பகுதிகளில் மின் வினியோகம் வழக்கம் போல் இருக்கும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE