திருப்பூர்:முதுகலை கணினி பயிற்றுனருக்கான கலந்தாய்வு, திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது.திருப்பூரிலுள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில், 27 கணினி பயிற்றுனர் நிலை - 1, பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான போட்டி தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டது.இதில், தேர்வானவர்களுக்கான, கலந்தாய்வு நேற்று துவங்கியது. முதல் நாளில், 13 பேருக்கு உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பணியிட ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இன்று மீதமுள்ள, 14 இடங்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE