அவிநாசி;மொபைல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, முதியவர், நுாதன போராட்டத்தில் ஈடுபட்டதால், டவர் அமைக்கும் பணி கைவிடப்பட்டது.அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம், முருங்கைகாடு தோட்டத்தில் மொபைல் போன் டவர் அமைக்க திட்டமிடப்பட்டது. அப்பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதில், பழனிசாமி, 83 என்பவரின் வீட்டில் இருந்து, 35 அடி துாரத்தில் மொபைல் போன் டவர் அமைக்கும் பணி, நேற்று காலை துவங்கியது.இதற்கு பழனிசாமி உள்ளிட்ட ஊர் மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். விதிமுறை பின்பற்றாமல் டவர் அமைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். ஒரு கட்டத்தில், பழனிசாமி, டவர் அமைக்க தோண்டப்பட்ட குழியில் படுத்து எதிர்ப்பு தெரிவித்தார்.அவிநாசி போலீசார் மற்றும் பழங்கரை வி.ஏ.ஓ., ராயப்பன் பேச்சு நடத்தினர். 'டவர்' பணியை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், 4 மணி நேரம் முதியவர் நடத்திய போராட்டம் முடிவுக்கு வந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE