திருப்பூர்:திருப்பூர், சூரிய கிருஷ்ணா நகரிலிருந்து இடுவம்பாளையம் செல்லும் ரோடு அமைக்கப்பட்ட இரண்டு நாளிலேயே, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து பயன்படுத்த தகுதியற்ற நிலையில் உள்ளது.திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட, 54வது வார்டு பகுதியில், சூரிய கிருஷ்ணாநகர் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள சுபாஷ் பள்ளி ரோடு வழியாக, இடுவம்பாளையம் செல்லும் ரோடு உள்ளது. எஸ்.ஆர்., நகர் உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் இருந்து வருவோர் இந்த ரோட்டை பெருமளவு பயன்படுத்துகின்றனர். இந்த ரோடு பாதியளவு, மண் ரோடாக உள்ளது. நீண்ட காலத்துக்கு முன் போடப்பட்ட தார், ஆங்காங்கே பெயர்ந்துள்ளது.இதனால், தார் ரோடாக மாற்றும் பணி நடந்தது. பணி முடிந்த இரண்டு நாளில், தார் ரோட்டில் போடப்பட்டிருந்த ஜல்லி பெயர்ந்தது; வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.அப்பகுதியினர் கூறுகையில், ''தரமில்லாமல் அமைக்கப்பட்ட இந்த ரோட்டை, மாநகராட்சி உயரதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோட்டை முழுமையாக சீரமைக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE