திருப்பூர்:பல ஆயிரம் ரூபாய்க்கு புதிதாக வாங்கிய மொபைல் போனை, கடைக்கு வெளியே பறித்துக் கொண்டு ஓடிய நபரை போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், மும்மூர்த்தி நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 30. பிரின்டிங் நிறுவன தொழிலாளி. இவர் நேற்று காலை குமரன் ரோட்டில் உள்ள ஒரு கடையில், 15 ஆயிரம் ரூபாய் விலையில் ஒரு புதிய மொபைல் போனை வாங்கினார்.அந்த போனுடன், எம்.ஜி.ஆர்., சிலை அருகே நடந்து சென்றார். அவ்வழியே வந்த ஒருவர், மொபைல் போனை பறித்து ஓட்டம் பிடித்தார்.அதிர்ச்சியடைந்த மாரிமுத்து கூச்சல் போட்டதும், சிலர் அவரை விரட்டி பிடித்து, வடக்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், தமிழ்நாடு தியேட்டர் பகுதியை சேர்ந்த முகமது ரபீக், 20 என தெரிந்தது. வழக்கு பதிவு செய்த போலீசார், போனை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE