டில்லியில் 40 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு

Updated : ஜன 03, 2021 | Added : ஜன 03, 2021 | கருத்துகள் (1) | |
Advertisement
புதுடில்லி: டில்லியில் 40 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனாவால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே, டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், டில்லியில் இதுவரை உருமாறிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக
டில்லியில் 40 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு

புதுடில்லி: டில்லியில் 40 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் புதிய உருமாறிய கொரோனாவால் இதுவரை 29 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே, டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 494 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், டில்லியில் இதுவரை உருமாறிய புதிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. இவர்கள் 40 பேரும் டில்லியில் உள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த 40ல் பெரும்பாலானோர் பிரிட்டனில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.



latest tamil news

இது தொடர்பாக டில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியதாவது: டில்லியில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 0.73 சதவீதமாக உள்ளது. டில்லியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 500க்கும் குறைவாகவே இருக்கும் என நம்புகிறோம். மருத்துவமனைகளில் 11 ஆயிரம் படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன. தற்போதைய நிலவரப்படி, 2 ஆயிரம் படுக்கைகள் மட்டும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.



மொத்தம் 40 பேருக்கு புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. நோயாளிகள் எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் தீவிரத்தை புரிந்துகொண்டுள்ளோம். அதை சமாளிக்க முழுமையாக தயாராக உள்ளோம். உருமாறிய கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சையளிக்க 4 தனியார் மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

தமிழன் - தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்,இந்தியா
03-ஜன-202111:54:14 IST Report Abuse
தமிழன் இப்போ யார் மேலே குற்றம் சுமத்த திட்டம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X