ஈரோடு: கொங்கு வேளாளர் இளைஞர் பேரவை சார்பில், ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் சூரியமூர்த்தி தலைமை வகித்தார். கொ.ம.தே.க., மாநில பொருளாளர் பாலு உட்பட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர். வேளாளர் என்ற பெயர், கொங்கு மண்டலத்தின் விவசாய தொழிலை பாரம்பரியமாக கொண்டுள்ள, சமூகத்தை சேர்ந்தவர்களை குறிப்பதாகும். இதில், இரண்டரை கோடி மக்களுக்கு மேல் வேளாளர் எனும் சமுதாய பெயரை தாங்கியுள்ளனர். ஆனால், இச்சமூக பெயரை வேறு சில சமூகத்தினருடைய பெயருடன் இணைக்க, மாநில அரசு பரிந்துரைப்பதை ஏற்க முடியாது. கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர், விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் எனக்கூறும் முதல்வர் பழனிசாமி, இப்பரிந்துரையை செயல்படுத்த அனுமதிக்கக்கூடாது. இப்பிரச்னைக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், பள்ளிபாளையம், குமாரபாளையம், திருச்செங்கோடு என ஊர்ஊராக மிகப்பெரிய அளவில் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம், என வலியுறுத்தினர். வேளாளர் என்ற பெயர் தாங்கிய பல்வேறு சமுதாயத்தினர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE