ஈரோடு: வி.மேட்டுப்பாளையத்தில் இன்று நடக்கும், தி.மு.க., கிராமசபை கூட்டத்தில், தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார். இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முத்துசாமி விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இன்று காலை, 10:00 மணிக்கு, ஈரோடு, மணல்மேட்டில் உள்ள, தி.மு.க., மாவட்ட அலுவலகத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின், 10:30 மணிக்கு, வெள்ளோடு, குமாரவலசு ஊராட்சி, வி.மேட்டுப்பாளையம் கிராமத்தில், நூலகத்தை திறந்து வைத்து, புத்தகங்கள் வழங்கிய பின், கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE