ஈரோடு: நூல் விலை உயர்வை கண்டித்து, வரும், 6ல் ஈரோடு மாவட்ட ஜவுளி மற்றும் துணி வியாபாரிகள் சங்கம், வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்க செயலாளர் சிதம்பர சரவணன் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக பஞ்சு விலை, 10 சதவீதம் கூட உயரவில்லை. ஆனால், நூல் விலை, 40 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. அவ்வப்போது நூல் விலை உயர்வதால், அதற்கேற்ப துணி விலையை உயர்த்தி விற்க முடியவில்லை. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதித்துள்ளனர். எனவே குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே, நூல் விலை உயர்த்தப்பட வேண்டும். இதை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் வரும், 6ல் ஈரோடு மாவட்ட ஜவுளி, துணி விற்பனை நிறுவனங்கள், கடைகள், குடோன்கள், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். மாவட்ட அளவில், 4,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE