வாழப்பாடி: தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்க கூட்டம், வாழப்பாடியில், நேற்று நடந்தது. சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சிவசங்கர் தலைமை வகித்தார். அதில், கிராம ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, சங்க ஒன்றிய தலைவராக அண்ணாதுரை, செயலர் அலெக்ஸ் பிரபாகரன், பொருளாளர் குமரேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். சங்க மாநில பொருளாளர் மகேஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE