சேலம்: மாநில பளுதூக்கும் போட்டியில், வீரர், வீராங்கனைகள், 300 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு அமெச்சூர் பளுதூக்கும் சங்கம், ஈசா உடற்பயிற்சி நிலையம் இணைந்து, 15வது சப் - ஜூனியர் ஆண்கள், பெண்கள் பளுதூக்கும் போட்டி, சேலம், காட்டூர், பாலமுருகன் திருமண மண்டபத்தில், நேற்று தொடங்கியது. அதில், சேலம், நாமக்கல், தர்மபுரி, தூத்துக்குடி, திருவள்ளூர், பூம்புகார், நாமக்கல், திருநெல்வேலி, நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 200 ஆண்கள், 100 பெண்கள் பங்கேற்றனர். ஆண், பெண் என, தனித்தனியே, 10 பிரிவுகளில், பளுதூக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், பலரும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இன்றும், போட்டி நடக்கிறது. முன்னதாக, தொடக்க விழாவில், மாவட்ட அமெச்சூர் பளுதூக்கும் சங்க செயலர் பொன்சடையன், தலைவர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE