இடைப்பாடி: கொங்கணாபுரத்தில் உள்ள வாரச்சந்தைக்கு, நேற்று, 1,000க்கும் மேற்பட்ட சண்டை சேவல்களை, அதை வளர்ப்போர், விற்பனைக்கு கொண்டு வந்தனர். கடப்பா, மைசூர், பெங்களூரு, தர்மபுரி, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, வியாபாரிகளும் குவிந்தனர். அவர்கள், சண்டை சேவலை, 2,000 முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை வாங்கினர். இதன்மூலம், 5 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இதுகுறித்து, வியாபாரிகள் கூறுகையில், 'பொங்கல் பண்டிகையில், சண்டை சேவலை மோதவிட்டு, சூதாட்டம் நடத்த பலர் திட்டமிட்டுள்ளனர். அதனால், சேவல் விற்பனை ஜோராக நடந்தது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE