பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்து, பெண்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அ.பள்ளிப்பட்டி ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில், நேற்று, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. அரூர், அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் நிர்மலா மற்றும் எஸ்.ஐ., மனோகரன் தலைமையிலான போலீசார், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில், வேலை செய்த பெண்களிடம் இதை வினியோகித்தனர். தொடர்ந்து, பெண்கள் மீதான குடும்ப வன்முறை சம்பவங்கள், வரதட்சணை கொடுமை, பாலியல் ரீதியான துன்புறுத்தல், இளம்வயது திருமணம், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, அவர்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், அதுபோன்ற குற்றங்களை சட்டத்தின் உதவியுடன் தடுக்கும் முறைகள், நடந்த குற்றங்கள் தொடர்பாக சட்ட உதவியுடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், உள்ளிட்டவை குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE