தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின், பல்வேறு பகுதிகளில் செயல்படும், டாஸ்மாக் கடைகளின் விற்பனையாளர்கள் மூலம், பலர் மொத்தமாக மதுபானங்களை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்த புகார்கள் சென்றதால், மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதி போலீசார் சோதனை செய்தனர். இதில், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றதாக, தர்மபுரி உட்கோட்டத்தில், 26 பேர், அரூர் உட்கோட்டத்தில், 12 பேர், பாலக்கோடு, பென்னாகரம் உட்கோட்டத்தில் தலா, ஏழு பேர் என மொத்தம், 52 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து, 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE