காரிமங்கலம்: அணையில் குளித்தபோது, நீரில் மூழ்கி வாலிபர் பலியானார். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த சேவன்கொட்டாயை சேர்ந்தவர் சிலம்பரசன், 30; இவர், நேற்று முன்தினம் புத்தாண்டு தினத்தை கொண்டாட, தும்பலஹள்ளி அணைக்கு சென்றுள்ளார். அணை நீரில் குளிக்கச்சென்ற அவர், ஆழமான பகுதிக்கு சென்று, நீரில் மூழ்கினார். அந்த வழியாக வந்தவர்கள், கரையில் உடைகள் மட்டும் இருப்பது குறித்து, காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்படி வந்த தீயணைப்புத் துறையினர், நேற்று முன்தினம் இரவு, 9:10 மணிக்கு, சிலம்பரசன் சடலத்தை, அணையிலிருந்து மீட்டனர். இதுகுறித்து, காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE