அரூர்: அரூரில், மாணவியை கடத்திய தனியார் பள்ளி ஆசிரியரை, போக்சோவில், போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அடுத்த சித்தர்கள் நத்தத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 36; இவர், தர்மபுரி மாவட்டம், அரூரிலுள்ள தனியார் பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த நவ., 16ல், மதியம், 1:00 மணிக்கு, வீட்டிலிருந்து தோட்டத்துக்கு சென்ற, 17 வயது, பிளஸ் 2 மாணவியை, கடத்திச் சென்றுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் புகாரின்படி, அரூர் போலீசார், போக்சோவில் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று ஈரோடு நடுப்பாளையத்தில், வாடகை வீட்டில் இருந்த, ஆசிரியர் சிவக்குமாரை, இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார், கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE