ஓசூர்: சூளகிரி ஒன்றியத்தில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, இருசக்கர வாகன மானியம் வழங்கப்பட்டது. தமிழகத்தில், வேலைக்கு செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு மூலம் இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இருசக்கர வாகனத்தின் மொத்த விலையில், 50 சதவீதம் அல்லது 25 ஆயிரம் ரூபாயில் எது குறைவாக உள்ளதோ, அந்த தொகை பயனாளிகளுக்கு மானியமாக வழங்கப்படுகிறது. அதன்படி, சூளகிரி ஒன்றியத்தில் மொத்தம், 13 பெண்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் வீதம், மூன்று லட்சத்து, 25 ஆயிரம் ரூபாய் நேற்று மானியமாக வழங்கப்பட்டது. சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத், பி.டி.ஓ.,க்கள் விமல்ரவிக்குமார், பாலாஜி ஆகியோர், மானிய காசோலைகளை வழங்கினர். ஒன்றிய கவுன்சிலர் தமிழ்செல்வி ராஜாராம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE