புதுடில்லி: டில்லியின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
டில்லியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து 2வது நாளாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் டில்லி மற்றும் அதன் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் கடும் குளிர் நிலவி வருகிறது. நேற்று (ஜன.,02) ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த சப்தத்துடன் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன்காரணமாக டில்லியை ஒட்டியுள்ள பகுதிகளில் கடும் குளிர் நிலவியது.

இந்நிலையில், டில்லியை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், அடுத்த 2, 3 நாட்களில் டில்லியின் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியசாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர் பனிப்பொழிவு, மழையால் டில்லி மற்றும் அதன் சுற்றியுள்ள மாநிலங்களில் கடும் குளிர் நிலவியது. இமாச்சலபிரதேசத்தின் கீலாங்க் பகுதியில் மைனஸ் 7.3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE