குளித்தலை: குளித்தலை, உழவர் மன்ற அமைப்பாளர் கோபால தேசிகன், கலெக்டர் மலர்விழிக்கு அனுப்பியுள்ள மனு விபரம்: குளித்தலை நகராட்சி தற்காலிக பஸ் ஸ்டாண்ட், 40 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. முசிறி, மணப்பாறை, பஞ்சப்பட்டி, நச்சலூர் மார்க்கமாக இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் வந்து செல்கின்றன. திருச்சி மற்றும் கரூர் மார்க்கமாக இயக்கப்படும் பஸ்கள் நெடுஞ்சாலையில் நிறுத்தப்படுவதால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும், திருச்சி மார்க்கம் செல்லும் பஸ்கள் நிழற்கூடம் இருந்தும், அங்கு நிறுத்தப்படுவதில்லை. முதியவர்கள், கர்ப்பிணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் சென்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE