கரூர்: அரவக்குறிச்சி அருகே அத்திப்பாளையம் பஞ்சாயத்து, அத்திப்பாளையத்தில், நீர்த் தேக்க மேல்நிலை தொட்டி கட்டும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. அதில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்று, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலை தொட்டி கட்டும் பணியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வளையபாளையத்தில் புதிய பைப் லைன், தொப்பம்பட்டியில் புதிய ரேஷன் கடை, தென்னிலை கடை வீதி, வைரமடை பகுதிகளில், உயர்கோபுர மின் விளக்கு திறப்பு விழா, வெங்ககல்பட்டியில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா, க.பரமத்தி பஞ்சாயத்து யூனியன் தலைவர் மார்க்கண்டேயன், கிழக்கு ஒன்றிய, அ.தி.மு.க., செயலாளர் கமலகண்ணன் உள்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE