நாமக்கல்: தமிழகத்தில், நாமக்கல், சேலம் மாவட்டத்தில், 1,000 பண்ணைகளில் உள்ள, ஐந்து கோடி கோழிகள் மூலம், தினமும், நான்கு கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (நெக்) நிர்ணயிக்கும் விலைக்கே, பண்ணையாளர்களிடம் இருந்து வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும். டிச., 3ல், 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்ட முட்டை கொள்முதல் விலை, ஏற்றம், இறக்கம் காரணமாக, கடந்த, 21ல், 490; 24ல், 510; 28ல், 490; 31ல், 495 என, உயர்த்தப்பட்டது. நேற்று, 15 காசு அதிகரித்து, 510 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.
தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது: தற்போது, சீதோஷ்ண நிலை மாறி குளிர் துவங்கியுள்ளது. கடும் பனி ஏற்பட்டுள்ளதால், நுகர்வு அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில், தேவை அதிகரித்த தால், அங்கு முட்டை அதிகளவில் அனுப்பப்பட்டது. ஆனால், விலை உயர்ந்ததால், கொள்முதல் விலை குறைக்கப்பட்டது. தமிழகம், கேரளாவில், குளிர்காலம் துவங்கியுள்ளதால், முட்டை தேவை அதிகரித்து, நுகர்வு அதிகரித்து, கொள்முதல் விலை உயர்ந்துள்ளது. இனி, கொள்முதல் விலை உயர வாய்ப்பு இல்லை. இதே நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE