அச்சிறுப்பாக்கம் : அச்சிறுப்பாக்கம் அருகே, சாலை தடுப்புச் சுவரில் மோதி, வேன் கவிழ்ந்த விபத்தில், ஒருவர் உயிர் இழந்தார்.
மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் படுகாயமடைந்தனர்.துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இருந்து, 14 பேர், நேற்று வேன் மூலம் திருத்தணிக்கு சென்றனர். துாத்துக்குடியைச் சேர்ந்த செல்வராஜ், 52, கார் ஓட்டி வந்தார்.திண்டிவனம் - -சென்னை நெடுஞ்சாலையில், அச்சிறுப்பாக்கம் அருகே வேன் சென்றபோது, நிலை தடுமாறிய வேன், அங்குள்ள சர்வீஸ் சாலை தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்தது.இதில், ஓட்டுனர் அருகில் அமர்ந்திருந்த சுப்ரமணி, 43, அதே இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
செல்வராஜ், மூன்று பெண்கள் உட்பட, எட்டு பேர் படுகாயம் அடைந்தனர்.தகவலறிந்த அச்சிறுப்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்தோரை மீட்டு, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE