கோவை:தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வுக்கு, வரும் எட்டாம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில், எட்டாம் வகுப்பு பயிலும், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கலாம். இத்தேர்வில் வெற்றி பெற்றால், பிளஸ் 2 வரை, ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பங்களை, வரும் 8ம் தேதி வரை பதிவிறக்கி, உரிய தகவல்களை பூர்த்தி செய்து, பள்ளிகளில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மாணவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, பள்ளிக்கான பிரத்யேக எமிஸ் பயனர் எண், பாஸ்வேர்டு கொண்டு மட்டுமே பதிவேற்றம் செய்ய முடியும். விண்ணப்ப தகவல்கள், வரும் 12ம் தேதி வரை மட்டுமே திருத்த வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.தேர்வு பிப்., மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு இத்தகவல்களை தெரிவித்து, தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவண செய்யுமாறு, தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE