கள்ளக்குறிச்சி : திருக்கனங்கூர் - ஆலத்துார் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த திருக்கனங்கூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆலத்துார் மற்றும் சுற்று வட்டார பகுதிக்கு பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் நாள்தோறும் செல்கின்றனர். இந்த சாலையின் குறுக்கே ஆலத்துார் ஏரியில் இருந்து சூளாங்குறிச்சி மணிமுக்தா அணைக்கு தண்ணீர் செல்லும் ஓடையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.அதிகளவு மழை பெய்தால் தண்ணீர் சீறிப்பாய்ந்தோடும் இந்த தரைப்பாலத்தில், தடுப்புச்சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.
அப்பகுதியில் தெரு மின்விளக்குகள், ரிப்ளக்டர்கள் ஏதும் இல்லாததால் இரவு நேரங்களில் அவ்வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, தரைப்பாலத்தில் தடுப்புச்சுவர் அமைப்பதுடன், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் ரிப்ளக்டர்கள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE