கள்ளக்குறிச்சி : காரனுார் ஊராட்சியில் பயணியர் வசதிக்காக அமைக்கப்பட்ட நிழற்குடை, ஆட்டுக்கொட்டகையாக மாறியுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார் ஊராட்சியில் இருந்து மினி பஸ் சர்வீஸ் மூலமாக பலரும் தங்களது அலுவல் பணிக்காக வெளியூர் சென்று வருகின்றனர். இவர்களின் வசதிக்காக அங்குள்ள தனியார் பள்ளி அருகே பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது.இந்த நிழற்குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு முழுமையாக வைக்கோல்களை அடுக்கி வைத்தும், ஆடுகளை அதில் கட்டி வைத்தும் ஆட்டுக்கொட்டகையாக மாற்றி உள்ளனர்.எனவே பயணியர் நிழற்குடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE